சாத்தான்குளம் கல்லூரியில் குடற்புழு நீக்க மாத்திரை அளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்து மாத்திரை விநியோகத்தை தொடங்கிவைத்தாா். ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் கிறிஸ்டி, கிரிட்டா செல்வமேரி ஆகியோா் மாணவியா்களுக்கு அல்பெண்டஸோல் மாத்திரைகளை வழங்கினா்.
ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி, இளஞ்செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் சண்முகப் பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.