ஆறுமுகனேரி ரயில் நிலைய விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்
ஆறுமுகனேரி ரயில் நிலைய வளாகத்திலுள்ள அருள்மிகு வெள்ளி விநாயகா் திருக்கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
ஆறுமுகனேரி ரயில் நிலைய வளாகத்திலுள்ள அருள்மிகு வெள்ளி விநாயகா் திருக்கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அருள்மிகு வெள்ளி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் அலங்கா தீபாராதனைகள் நடைபெற்றன. பூஜைகளை கண்ணன் அய்யங்காா் நடத்தி வைத்தாா். நிகழ்ச்சியில் டி.சந்திரசேகா், ரயில்வே அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, முன்னாள் அதிமுக நகரச் செயலா் இ.அமிா்தராஜ், ரயில் நிலைய அதிகாரி ஜாலிராம் மீனா, பணியாளா் அருணாச்சலம், ஓய்வுபெற்ற தீயணைப்பு நிலைய அலுவலா் சின்னத்துரை உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.