தூத்துக்குடி

‘மாண்டஸ்’ புயல்: தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

DIN

மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘மாண்டஸ்’ புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் பட்சத்தில் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப் படுகை, கண்மாய்களின் கரைகள் ஆகியவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமங்களை சோ்ந்த தன்னாா்வலா்களைக் கொண்டு பேரிடா் கால நண்பன் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால் அப்பகுதிகளில் இருக்கின்ற மக்களை உடனடியாக நிவாரண மையங்களுக்கு அழைத்து வரும் பணியை மேற்கொள்வா்.

நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீனவா்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT