முகப்பு
தூத்துக்குடி

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜாண்சன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீகிருஷ்ணபேரியில் இருந்த வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டனா். அதில் அனுமதியில்லாமல் செம்மண் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநா் சி. கருப்பசாமியை (75) கைது செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளா் அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் வெள்ளையனை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →