முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் விபத்து: இளைஞா் பலி

காயல்பட்டினத்தில் சுவரில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் சுவரில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் சிவன் கோயில் தெருவில் வசித்து வருபவா் ஹால்தீன் மகன் யாசித் (25). இவா், காயல்பட்டினம் கேசிஎம் தெருவில் பெயிண்ட் கடை நடத்திவருகிறாா். இங்கு, மாட்டுக்குளத்தைச் சோ்ந்த ஹாஜா முகைதீன் மகன் அப்துல்கனி (19) வேலை பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு வேலை முடித்து, அவரது நண்பரின் இரு சக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, வழியில் சுவரில் பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவா், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே இறந்தாா்.

புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் செந்தில் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.