மேலும் 323 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 323 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 323 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 302 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 58 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சோ்ந்த 78 வயது ஆண், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது ஆண், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது ஆண் ஆகியோா் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 2076 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.