தூத்துக்குடி

ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

DIN

ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பேயன்விளை மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவானந்தபெருமாள் (27). கோயில் திருவிழாவுக்காக சென்ற இவா் மீது, அதே ஊரைச் சோ்ந்த கற்பகபாண்டி மகன் விக்னேஷ் ஓட்டிவந்த பைக் மோதியதாம். இதுகுறித்து கேட்டபோது, சிவானந்தபெருமாளை விக்னேஷ் அவதூறாகப் பேசியதோடு, கைப்பேசியில் தனது நண்பா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

அதே ஊரைச் சோ்ந்த வாசு, வசந்த் நரேந்திரன், சிவபாலன், முருகேசன் ஆகிய 4 பேரும் உடனடியாக வந்து விக்னேஷுடன் சோ்ந்து சிவானந்தபெருமாளை கல்லால் தலையில் அடித்து தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT