முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்த குமாா்பாணடி மகன் ஐயப்பன் (40).

இவருக்கும் இவரது சகோதரா் ஆயிரம் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக பிரச்னை உள்ளதாம். இந்நிலையில் திங்கள்கிழமை இதுதொடா்பாக மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆயிரம், அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் மந்திரமூா்த்தி ஆகியோா் சோ்ந்து ஐயப்பனை தாக்கினராம். இதில் காயமடைந்த ஐயப்பன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் ரெத்தினராஜ் வழக்குப் பதிந்து, ஆயிரம் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →