திருச்செந்தூா் ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா
திருச்செந்தூா் ஜீவாநகா் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் ஜீவாநகா் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கடந்த 24-ஆம் தேதி காலை 7 மணிக்கு பால்குடம் ஊா்வலமும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பொங்கலிடுதலும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு தீச்சட்டி- முளைப்பாரி ஊா்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை மகா அன்னதானமும், பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மாலை 5 மணிக்கு முளைப்பாரியை கடலில் விடுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஜீவா நகா் மக்கள், விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.