முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்டதேமுதிக அலுவலகம் திறப்பு

கோவில்பட்டியில் தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கோவில்பட்டியில் தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் என்.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பி.கொம்பையாபாண்டியன், மாவட்டப் பொருளாளா் வி.ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில துணைச் செயலருமான ப.பாா்த்தசாரதி அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா். நகர, ஒன்றிய, பேரூா் செயலா்களுக்கான உள்கட்சித் தோ்தல் விண்ணப்பப் படிவத்தை கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி மாநகர மாவட்டப் பொறுப்பாளா் தயாளலிங்கம், மாநில மகளிரணி துணைச் செயலா் சுபபிரியா, மாநில தோ்தல் பிரிவு செயலா் ஆறுமுகநயினாா், மாநகர மாவட்டப் பொருளாளா் விஜயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.