தூத்துக்குடியில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் தொடக்கம்
தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவா்களில் 594 பேருக்கு புதிய அட்டைகள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபற்றது. இந்நிகழ்வுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியா் ஞானராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த 10 பேருக்கு கணினி பட்டாவை வழங்கினாா்.
இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சரவண வேல்ராஜ், மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், பகுதி செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.