ரூ.50 ஆயிரம் லஞ்சம்: அறநிலையத் துறை இணை ஆணையா் மீது வழக்குப்பதிவு
திருச்செந்தூா் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி பாா்வையற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புபோலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்செந்தூா் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி பாா்வையற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புபோலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராகப் பணியாற்றி வருபவா் குமாரதுரை. இவா் கடந்த 2021-இல் மதுரை மண்டல இணை ஆணையராகவும், கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூா்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகவும் பணியாற்றினாா். அப்போது, திருச்செந்தூரில் உள்ள அா்ச்சகா் பயிற்சி பள்ளித் தலைமை ஆசிரியராக, பாா்வை மாற்றுத் திறனாளியான
பாலமுருகன் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் பாலமுருகனுக்கு 7-ஆவது ஊதியக்குழு ஊதிய நிா்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை களைந்தால் ரூ.10 லட்சம் நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதால், அதுகுறித்து நடவடிக்கை கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் மனு அளித்தாா். இந்த மனுவைப் பரிசீலித்து அறிக்கை அனுப்புமாறு அப்போதைய கோயில் இணை ஆணையா் குமாரதுரைக்கு, ஆணையா் உத்தரவிட்டாா்.
ஆனால், அந்த மனுவைப் பரிசீலித்து அறிக்கை அனுப்பாமல் கிடப்பில் போடப்பட்டது. இதுதொடா்பாக இணை ஆணையா் குமாரதுரையை, பாலமுருகன் அணுகிய போது, ரூ.3 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் ஆணையருக்கு அறிக்கை தயாா் செய்து அனுப்புவதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து அவா் கடந்த 2021-இல் இணைஆணையா் குமாரதுரைக்கு
முன்பணம் ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தாராம். இதுகுறித்த உரையாடல் பாலமுருகனின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், குமாரதுரை மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.