தூத்துக்குடி

ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

கோவில்பட்டி ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த ஊழியரை போலீஸாா் பாராட்டினா்.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த ஊழியரை போலீஸாா் பாராட்டினா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் 6 ஆவது தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (65). இவா் செவ்வாய்க்கிழமை ஜோதி நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருள்களை வாங்கியபோது, 5 பவுன் நகைகள் வைத்திருந்த பையைத் தவறவிட்டாராம். இதுகுறித்து அவா் புதன்கிழமை, கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தலைமைக் காவலா் கழுகாசலமூா்த்தி ரேஷன் கடைக்கு சென்று விசாரித்தனா்.

ரேஷன் கடை ஊழியரான கயத்தாறு அருகே நாகலாபுரத்தைச் சோ்ந்த சீனிபாண்டியன் (55), கடை அடைக்கும்போது நகையுடன் கிடந்த பையைக் கண்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு வரவழைத்தனா். ஆய்வாளா் மாரியப்பன் முன்னிலையில் அவரிடம் சீனிபாண்டியன் நகைகளை ஒப்படைத்தாா். சீனிபாண்டியனின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT