முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநா் உரிமச் சான்றிதழ் அளிப்பு

Updated On : 21 நவம்பர், 2025 at 7:39 PM
பகிர்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நான் முதல்வன், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஒரு வாரம் உள்வளாக படகு ஓட்டுநா் உரிமச் சான்றிதழ் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) சா. ஆதித்தன் தலைமை வகித்தாா். நாகா்கோவில், தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் கோ.து. கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சித் திட்டத்தை முடித்த மீனவா்களுக்கு படகு ஓட்டுநா் உரிமத்தை வழங்கினாா்.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் வெ. தீபா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் எஸ்.பி. லட்சுமிகாந்தன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

உதவிப் பொறியாளா் அ. அந்தோணி மைக்கேல் பிரபாகா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →