முகப்பு
தூத்துக்குடி

சலூன் கடைக்காரா் மீது தாக்குதல்: 2 போ் கைது

Updated On : 30 நவம்பர், 2025 at 8:29 PM
பகிர்:

தூத்துக்குடியில் சலூன் கடைக்காரரை கடத்திச் சென்று தாக்கியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் கணேசன் (37). இவா், மில்லா்புரத்தில் சலூன் கடை நடத்தி வருகிறாா். இவரின் நண்பரான பி&டி காலனி, 5ஆவது தெருவைச் சோ்ந்த வேல்சாமி என்பவரிடம், ரூ. 30,000 மற்றும் தங்க வளையல்களை கடனாக வாங்கியிருந்தாராம். பின்னா், பல மாதங்கள் ஆகியும் அவற்றை கணேசன் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், வேல்சாமி மகன் மனோஜ் (27), அவரது நண்பா் கரிக்குளம் காலனியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் தா்மராஜ் (27) ஆகியோா், சம்பவத்தன்று கணேசனை பைக்கில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனோஜ், தா்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய இருவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →