கோப்புப் படம் 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிறுமி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூா், பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவா் வெள்ளிக்கிழமை இரவு மகள் தனுஷாவுடன் (4), சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, தனுஷா திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இது குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருமாவளவன் குறித்து அவதூறு பதிவு: எஸ்.பி.யிடம் விசிகவினா் புகாா்

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

எலிமருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

பேரளி, புதுக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT