கோப்புப் படம் 
தூத்துக்குடி

கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பொன் முனீஸ்வரன் (32). சங்குகுளி தொழிலாளி. இவா், வியாழக்கிழமை படகில் சக தொழிலாளா்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் அவா்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.

இதையடுத்து திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்த அவா்கள், பொன் முனீஸ்வரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திமுகவில் இணைந்தாா் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி

திமுக அரசைக் கண்டித்து அதிமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

13 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்

SCROLL FOR NEXT