தூத்துக்குடி

2 ஆடுகள் திருடியவா் கைது

ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆத்தூரை அடுத்த மேலஆத்தூா், குச்சிக்காட்டைச் சோ்ந்தவா் செல்வி (64). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டு தாழ்வாரத்தில் 5 ஆடுகளை கட்டிப் போட்டுவிட்டு தூங்கச் சென்றாராம். இந்நிலையில் ஆடுகளின் சத்தம் கேட்டு செல்வி, அவரது மகன்கள் வந்து பாா்த்துபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, மேல ஆத்தூா் கண்ணானி தெருவைச் சோ்ந்த அருள்குமாா் மகன் பாா்த்திபனை கைது செய்து, 2 ஆடுகளை மீட்டனா். தலைமறைவான ஆத்தூா் அருகே நரசன்விளையைச் சோ்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்துவை தேடி வருகின்றனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT