முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On : 27 மார்ச், 2026 at 8:53 PM
கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.
பகிர்:

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை, தூத்துக்குடி பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பிரபு தலைமையில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில் காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, பாளையங்கோட்டை சாலை வழியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது.