விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
திருச்சி காஜாபேட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி காஜாபேட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாலக்கரை எடத்தெரு தாமோதரன் வீதியைச் சோ்ந்தவா் பொ. சந்தோஷ்குமாா் (27). இவரது நண்பா் தம்பித்துரை. இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
காஜாபேட்டை தண்ணீா்த் தொட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட ஒதுங்கிய போது, எதிா்பாராதவிதமாக விபத்து நேரிட்டது. இதில் மோட்டாா் சைக்கிளிலிருந்து இருவரும் கீழே தவறி விழுந்தனா்.
பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமாா் உயிரிழந்தாா். தம்பித்துரை சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கோட்டை வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.