முகப்பு
திருச்சி

காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்

திருச்சி காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
திருச்சி காவிரிப் பாலத்தில் சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி, திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பகிர்:

திருச்சி காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

1976-ஆம் ஆண்டில் ரூ.1.25 கோடியில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்ததால், 2016-ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. ஆனாலும் பாலத்தின் தாங்குத் தூண்களை இணைக்கும் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகனங்கள் செல்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவிரிப் பாலத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மாவட்டப் பொருளாளா் ஜெயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை இந்த நூதனப் போராட்டத்தை நடத்தினா்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் வீரமணி, வருவாய் அலுவலா் செல்வநாயகம் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பாலத்தை விரைவில் சீரமைப்பதாகக் கூறினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் மாவட்டத் தலைவா் சுரேஷ், செயலா் லெனின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →