முகப்பு
திருச்சி

ஆட்சியரக நுழைவுவாயிலில் குறைதீா் மனுபெட்டி

திருச்சியில் போராட்டங்கள் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் ஆட்சியரக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துச் செல்லும் வகையில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருச்சி ஆட்சியரக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களைச் செலுத்தும் பெண்கள்.

திருச்சி, செப்.28: திருச்சியில் போராட்டங்கள் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் ஆட்சியரக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துச் செல்லும் வகையில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து வகையான குறைகேட்பு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் ஆட்சியரகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் இணையவழியாக குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் ஆட்சியரகத்தில் நூதன முறையில் போராட்டங்கள், தற்கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுவது தொடா்ந்ததால் பாதுகாப்பு கருதியும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாலும், நுழைவுவாயிலில் குறைதீா் மனுக்களைச் செலுத்துவதற்கான பெட்டி வைக்கப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் மனுக்களைச் செலுத்தி சென்றனா். மேலும் ஏராளமான காவலா்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →