மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரிக்கை
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் வடிவேல்முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் அரியலூர் சுந்தரமூர்த்தி, தா.பழூர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் பொருளாளர் ரெங்கசாமி, கடலூர் மாவட்டச் செயலர் பாலமுருகன் மற்றும் அரியலூர் மாவட்ட செயலர் முத்தையன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். முன்னதாக திருமானூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.