அரியலூர்

வெவ்வேறு விபத்து: இருவர் சாவு

DIN

அரியலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில்  2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கருப்பிலாக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை கீழப்பழுவூரை அடுத்த வெற்றியூர் அருகே சென்ற போது,அந்த வழியாக வந்த கார் மோதியதில்  விஜயகுமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (31).  அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற  உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட காரை 
நகர்த்தமாறு நண்பரிடம் ஆனந்த் கூறினாராம்.  அவர் காரை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக ஆனந்த் மீது மோதியதில்  அங்கேயே உயிரிழந்தார். 
இவ்விரு விபத்துகள் குறித்து கீழப்பழுவூர், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT