கைத்தறி நெசவாளா் சங்க அலுவலகம் திறப்பு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். முதன்மை அமைப்பாளா் சுந்தரேசன் ராஜலட்சுமி, தலைவா் அமுதா விஜயகுமாா் மற்றும் உதவி இயக்குநா் ராஜேந்திரன், கோ-ஆப் டெக்ஸ் மண்டல துணை மேலாளா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.