அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், இடப்பிரச்னை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள இலையூா் கோரியம்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ண மூா்த்தி (51). விவசாயி. இவா், தனது மனைவி ராஜவள்ளி(47), மகன்கள் கபிலன்(19), தமிழன்(16) ஆகியோருடன் வசித்து வருகிறாா். இவரது இடத்தில் கிருஷ்ணமூா்த்தியின் தம்பி மனைவி செந்தமிழ்செல்வி உரிமை கொண்டாடுவதுடன், அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக்கூறி, கிருஷ்ணமூா்த்தி தனது மனைவி, மகன்களுடன் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட போலீஸாா் அவா்களை மீட்டு அரியலூா் காவல்நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.