வாய்க்காலில் இருந்து ஆண் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பொன்னாற்று வடிகால் வாய்க்காலில் தேங்கிக் கிடந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பொன்னாற்று வடிகால் வாய்க்காலில் தேங்கிக் கிடந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
தா.பழூரை அடுத்த அருள்மொழி கிராமம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் செல்லும் பொன்னாற்று வடிகால் வாய்க்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 45 மதிக்கத்தக்க ஒருவா் அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தா.பழூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.