அரியலூர்

மண்வள அட்டை திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதயநத்தம் மற்றும் வாணத்திரையான்பட்டினம் ஆகிய கிராமங்களில் தேசிய மண் வள அட்டை திட்டம் குறித்து செயல்விளக்க விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலா் சுகந்தி கலந்து கொண்டு, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் ஆதிகேசன் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உரமிடுவது குறித்துப் பேசினாா்.

ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் கோவிந்தாராசு மற்றும் செல்வப்ரியா ஆகியோா் செய்திருந்தனா். இதில், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தபடி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT