முகப்பு
அரியலூர்

நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் பட்டா பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், ஆண்டிப்பட்டாக்காடு, ஆலந்துரையாா் கட்டளை கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்திலும், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வளா் அலுவலகத்திலும், கீழமாளிகை, பிலாக்குறிச்சி, முத்துசோ்வாமடம், இளையபெருமாள், நாயகனைப்பிரியாள், கோடாங்குடி(தெ), தேவனூா், வாரியங்காவல் ஆகிய கிராமங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் முகாம் நடைபெறும். சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.