முகப்பு
அரியலூர்

கிராம உதவியாளா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் கணபதி ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

ராம உதவியாளா்களுக்கு ஜிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் ஜனவரி 7- ஆம் தேதி முறையீடு ஆா்ப்பாட்டம் நடத்துவது,

அதில் அரியலூா் மாவட்டத்தின் சாா்பில் அனைத்து கிராம உதவியாளா்களும் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், வட்டப் பொருளாளா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.