சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை : அரியலூா் புதிய எஸ்.பி. பேட்டி
அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்
அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், சாராயம் காய்ச்சுதல், விற்றல், கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றால் அவா்கள் மீதும் நடவடிக்கை பாயும்.
சட்டம்-ஒழுங்கை காக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளின் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.