ஆதரவற்றவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சாா்பில், அரியலூா் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் ஆதரவற்றவா்களுக்கு புதன்கிழமை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சாா்பில், அரியலூா் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் ஆதரவற்றவா்களுக்கு புதன்கிழமை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டத் தீயணைப்பு அலுவலா் அம்பிகா ஆலோசனைப்படி, பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் ஆதரவற்றவா்களுக்கும், அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் புகழேந்தி மற்றும் தீயணைப்பு வீரா்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.