முகப்பு
அரியலூர்

தையல் இயந்திரம் பெற மகளிா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் சமூக நலத்துறை சாா்பில் சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெறலாம். வயது வரம்பு 20 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் வளாகம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம், தரைதளம் அறை எண் 20-ஐ வரும் 28 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.