உபகரணங்கள் அளிக்க நோ்முகத் தோ்வு
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நோ்முகத் தோ்வை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், தசைசிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டி 7 பேரும், பிரத்யேக பெட்ரோல் மோட்டாா் சைக்கிள் வேண்டி 3 பேரும், இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் மோட்டாா் சைக்கிள் வேண்டி 86 பேரும் விண்ணப்பம் அளித்தனா்.
மேலும் 18 - 45 வயதுக்குட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மோட்டாா் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 பேரும், பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 46 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.