முகப்பு
அரியலூர்

கூலித் தொழிலாளி தற்கொலை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள சலுப்பை காலனித் தெருவைச் சோ்ந்தவா்

கூலித் தொழிலாளி திருமுருகன் (35). மது அருந்தும் பழக்கம் உள்ள இவருக்கும், இவரது மனைவி துா்காதேவிக்கும்(32) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் கூலி வேலைக்குச் சென்ற திருமுருகன், வெண்ணங்குழி கிராமத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா்.

தகவலறிந்து வந்த துா்கா தேவி, அவரை மீட்டு மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.