முகப்பு
அரியலூர்

புதிய தொழில்முனைவோா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற தளா்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் படித்த இளைஞா்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற தளா்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தோ்ச்சி. 25 சதவீத மானியத் தொகையின் அதிகப்பட்ச தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் 25 சதவீத மானியத் தொகையில், கூடுதலாக 10 சதவீதம் மானியம் (25% + 2.5%) வழங்கப்படும். இந்த ஆணையானது 02.09.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூா் அலுவலகத்தை 04329-228555, 89255 33925, 89255 33926 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.