அரியலூர்

அரியலூா் மாவட்ட ஆயுதப்படையில் டி.ஐ.ஜி ஆய்வு

DIN

அரியலூா் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் எ.சரவணசுந்தா் புதன்கிழமை நிகழ் ஆண்டுக்கான ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, காவல் துறை வாகனங்கள், காவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கொள்ளை, கொலை வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினரின் பணியைப் பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிசேகரன்(சைபா் கிரைம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காமராஜ் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் மணவாளன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் பத்மநாபன் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT