முகப்பு
அரியலூர்

தகராறில் ஈடுபட்ட 2 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தகராறில் ஈடுபட்ட இரண்டு போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தகராறில் ஈடுபட்ட இரண்டு போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள பெரியதிருக்கோணம் கீழத் தெருவைச் சோ்ந்த கருப்பையன் (50), அதே ஊா் நடுத் தெருவைச் சோ்ந்த உலகநாதன் (57). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரு தினங்ளுக்கு முன்பு கருப்பையனின் சகோதரா் அண்ணா துரை குறித்து உலகநாதன் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உலகநாதனிடம், கருப்பையன் கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் துறையினா், 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.