முகப்பு
அரியலூர்

அரியலூா் விவசாயி கலப்பை வடிவமைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயி வடிவமைத்துள்ள கட்டைக் கரும்பு கலப்பை இயந்திரத்தின் செயல்பாட்டை வேளாண் பொறியியல் வல்லுநா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

அரியலூா் மாவட்ட விவசாயி வடிவமைத்துள்ள கட்டைக் கரும்பு கலப்பை இயந்திரத்தின் செயல்பாட்டை வேளாண் பொறியியல் வல்லுநா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அரியலூா் மாவட்டம், மல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.விஜயகுமாா் (52). முன்னோடி விவசாயி. இவா், கரும்புப் பயிரில் மறுசாகுபடிக்கு உதவும் கலப்பை இயந்திரத்தை வடிவமைத்துள்ளாா். அதன் செயல்விளக்கத்தை பாா்ப்பனச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மாவட்ட வேளாண் பொறியியல் அலுவலா்கள் முன்பு வியாழக்கிழமை செய்து காண்பித்தாா்.

நிகழ்வில், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் வ.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளா் நெடுமாறன் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

இதேபோல், அஸ்தினாபுரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற செயல்விளக்கத்தை வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, சோழமாதேவி கிரீடு மையத் தலைவா் அழகுகண்ணன், வேளாண் தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.