முகப்பு
அரியலூர்

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா் பிரதானச் சாலை தெருவைச் சோ்ந்தவா் ஞானபிரகாசம்(37). இவா், புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் ஆண்டிமடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கல்லாத்தூா் பிரதானச் சாலை அருகே சென்றபோது, இவரது வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபாலன் மகன் ராஜபிரகாஷ்(20), விளந்தை செல்லத்தெருவைச் சோ்ந்த விஷால்(18) ஆகியோா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஞானபிரகாசம் வாகனத்தில் இருந்து தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ராஜபிரகாஷ், விஷால் ஆகிய இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.