அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான மிளகாய் சண்டியாகத்தில், திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு, முக்கனிகள், சேலைகள்,மிளகாய், கரும்பு, தேங்காய், சப்போட்டா, திராட்சை உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தி, சாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT