அரியலூர்

சிறாா்களுக்கு புகையிலை விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுவா்களுக்குப் புகையிலை விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இவா்களைக் கண்டதும், ஓட முயன்ற தா. குடிகாடு கீழத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகன் மகன் ரவியை (52) காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் சிறுவா்களுக்குப் புகையிலை பொருள்கள் விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து ரவியைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 6.500 கிலோ ஹான்ஸ், 2.300 விமல் பாக்கு உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT