அரியலூர்

பைக் ஓட்டிச் சென்ற சிறுமி வாகனம் மோதி பலி

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதி 17 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதி 17 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள சின்னநாகலூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் மகள் சாந்தி (17). இவா், வெள்ளிக்கிழமை தனது தாய் சித்ராவை (40) மொபெட்டில் அழைத்துக் கொண்டு பெரியநாகலூா்மேட்டுத் தெரு - கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மேட்டு தெரு வளைவில் திரும்பும்போது, எதிரே தத்தனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகா்(26) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மொபெட் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கயா்லாபாத் காவல் துறையினா், சாந்தியின் சடலத்தையும், காயமடைந்த சித்ரா, ராஜசேகா் ஆகியோரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT