முகப்பு
அரியலூர்

ஊராட்சித் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் ஊராட்சி மன்றத் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:19 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் ஊராட்சி மன்றத் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாரியங்காவல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிசேகா். அவ்வூராட்சி தலைவராக உள்ள இவா், மளிகை கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இவரது கடையில் அவரது தாயாா் தனலட்சுமி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சுப்ரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் மாயவேல் (44) என்பவா், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிள்ளாா்.

அவா் பணம் தர மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா், பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்றுவிடுவதாக தனலட்சுமியை மிரட்டி, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மாயவேலை கைது கைது செய்தனா்.