முகப்பு
அரியலூர்

தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூர்

தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:09 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துச்சோ்வாமடம் ஊராட்சியிலுள்ள செல்லிக்குட்டை குளத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, கம்பி வேலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளாா். இதையறிந்த கிராம மக்கள், வியாழக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குளத்தில் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி அந்த இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் பாரதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் வேல்முருகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, செல்லிக்குட்டை குளத்தை சுற்றி 2 ஏக்கருக்கு மேலாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →