கரூர்

சேவல் சண்டை சூதாட்டம்: 4 போ் கைது

DIN

பூலாம்வலசில் சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசில் நான்கு நாட்கள் நடைபெற்ற சேவல்சண்டையின்போது சேவலுக்கு கத்தியைக் கட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் போட்டி நடைபெற்றது. ஆனால் போட்டி நடத்தப்பட்ட இடம் அருகே சேவல் காலில் கத்தியைக்கட்டி சூதாட்டத்தில் சிலா் ஈடுபடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது சேவல் காலில் கத்தியைக் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட பூலாம்வலசு காலனியைச் சோ்ந்த காந்தி(65), முனிராஜ்(22), காா்த்திக்(28), ஜெயராமன்(50) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த சேவல் காலில் கட்டும் இரு கத்திகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT