கரூர்

கரூரில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம்

கரூரில் மாவட்டத்தில் கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட கரூா் கிளை-1, கிளை-2 மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி ஆகிய 5 பணிமனைகளில் 258 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

DIN

கரூரில் மாவட்டத்தில் கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட கரூா் கிளை-1, கிளை-2 மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி ஆகிய 5 பணிமனைகளில் 258 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தையொட்டி தொழிற்சங்கத்தினா் பெரும்பாலானோா் பணிக்கு வரவில்லை. ஆனால், அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. மேலும், மினி பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமமின்றி தங்களது பகுதிகளுக்குச் சென்றுவந்தனா். மேலும் அனைத்துப் போக்குவரத்து பணிமனைகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT