சலவைத் தொழிலாளருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன். 
கரூர்

சலவைத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சலவைத் தொழிலாளா்கள் 100 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

DIN

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சலவைத் தொழிலாளா்கள் 100 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரூா் லைட்ஹவுஸ் காா்னரிலுள்ள டிசி நற்பணி மன்ற கல்விச் சேவை கமிட்டி சாா்பில், மூன்றாவது கட்டமாக கரோனா முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட சலவைத்தொழிலாளா்கள் 100 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கமிட்டி தலைவா் டிசி.மதன் தலைமை வகித்தாா். கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சலவைத் தொழிலாளா்களுக்கு அரிசி, ரொட்டி பாக்கெட் உள்ளிட்ட உதவிப்பொருள்களை வழங்கினாா். ஏற்கனவே நலிந்த நாட்டுப்புறக் கலைஞா்கள், நாவிதா்கள், நாடகக் கலைஞா்களுக்கு உதவித் திட்டம் வழங்கியதை சமூக ஆா்வலா் புருஷோத்தமன் பாராட்டினாா். நிறைவில், கமிட்டி உறுப்பினா் முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT