பரணி பாா்க் வித்யாலயாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை
கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை பறைசாற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பரணி கல்விக் குழுமத் தாளாளா் மோகனரங்கன் மற்றும் செயலா் பத்மாவதி மோகனரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் முதன்மை முதல்வா் டாக்டா். ராமசுப்பிரமணியன் முன்னிலை வைத்தாா். நிகழ்வில் அறங்காவலா் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணிபாா்க் முதல்வா் சேகா், எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தி, பரணி பாா்க் சாரணா் மாவட்டச் செயலா் பிரியா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.