முகப்பு
இந்தியா

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது 16 என்ற எண்ணைக் காட்டி ராகுல் புதிர் போட்டது பற்றி..

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:24 PM
ராகுல் காந்தி - PTI
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:50 PM

மக்களவையில் இன்று அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்குத் தனித்துப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை அவர் குறிப்பிடும் வகையில் இந்த 16 என்ற கணித புதிர் அமைந்திருக்கிறதா? அல்லது அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று இணையத்தில் இன்று அலசப்பட்டு வருகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துகளை முன்வைத்துப் பேசி வந்தார்.

Advertisement

அப்போது அவர் திடீரென தனது பேச்சின் பாணியை மாற்றி,

என் கைப்பேசியில் ஏப்ரல் 16 என்ற தேதியைப் பார்த்தபோது, ​​‘கடவுளே, என்ன ஒரு ஆச்சரியம்!’ என்று வியந்தேன். அதுதான் அந்த எண், பதினாறு. அந்தப் புதிருக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், தயவுசெய்து எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள் என்று கூறியபடி, ஒரு காகிதத்தில் 16 என்று எழுதப்பட்டிருந்ததைக் காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.